நாவற்காடு கிராம தைப் பொங்கல் விழா!

யாழ்.வரணி – நாவற்காடு கிராம மக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தைப் பொங்கல் விழா இன்று(22) இடம்பெற்றது.

நாவற்காடு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும்,பிரஜா சக்தி தலைவருமான நகுலேஸ்வரன் தலைமையில் இந்த பொங்கல் விழா இடம்பெற்றது.

நிகழ்வில்,தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ், வரணி சமுர்த்தி வங்கி முகாமையாளர், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் நிறோஜன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Exit mobile version