மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று(16) ஈடுபட்டிருந்தனர்.
தலங்கம பகுதியில் நேற்று முன்தினம்(14) சட்டத்தரணி ஒருவரும் அவரின் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.


அந்தச் சம்பவத்தை கண்டித்தும், துப்பாக்கிதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி!
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை!
பணின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!
வெல்லே சாரங்க துயாயில் கைது!