‎மதவாச்சியில் துப்பாக்கிச் சூடு – விவசாயி உயிரிழப்பு!‎

‎அநுராதபுரம் – மதவாச்சி – கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

‎இந்த சம்பவம் நேற்று(21) இரவு இடம்பெற்றுள்ளது.

‎உயிரிழந்தவர் மதவாச்சி – துமின்னேகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய விவசாயி ஒருவர் என தெரியவந்துள்ளது.

‎குறித்த விவசாயி துப்பாக்கி சூட்டிற்கு உள்ளாகி காயமடைந்த நிலையில், மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்க சென்றபோது இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.

‎விவசாயி கரம்பன்குளம் வனப்பகுதிக்கு அருகில் மருதாணி பயிரிட்டு வந்த நிலையில், விவசாய நோக்கங்களுக்காக வனப்பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

‎சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version