சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதோடு, அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முன்னாள் பொலிஸ் தமிழ் உத்தியோகத்தர், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இருந்தும் சட்டவிரோத மணல் அகழ்வில் குறித்த நபர் தொடர்ந்தும் ஈடுபட்டுவந்துள்ளார்.
இந்தநிலையில் பருத்தித்துறை கற்கோவளத்தில் அகழ்ந்த மண்ணை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று (05) இடைமறித்தனர்.
பொலிஸாரின் சமிக்ஞையையும் பொருட்படுத்தாது சாரதி டிப்பரை ஓட்டுச் சென்றுள்ளார்.
அதனால் வாகனத்தை விரட்டிச் சென்ற பொலிஸார், சாவகச்சேரி நவற்குழி பகுதியில் வைத்து டிப்பரைக் கைப்பற்றியதோடு, சாரதியையும் கைது செய்துள்ளனர்.

தென்மராட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களும், கஞ்சிவழங்கும் நிகழ்வுகளும்!
இடி மின்னல் தாக்கி யாழில் இளைஞர் பலி!
அமெரிக்க எண்ணெய் கொள்வனவு செய்ய சீனா இணக்கம்: டிரம்ப் தெரிவிப்பு!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் விலகிச் செல்கிறது: கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை!