முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று (11)ஆரம்பமாகியுள்ளது.
அதற்கமைய, யாழ்ப்பாணம் வலி-தெற்கு பிரதேச சபை முன்பாக நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.


நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் உப செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் பொதுச் சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து, முள்ளிவாய்க்காலின் இறுதி யுத்த காலத்தில் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை நினைவுகூரும் வகையில் “முள்ளிவாய்க்கால் கஞ்சி”வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தையிட்டி – பவானி வீதி தொடர்பான கட்டளை மல்லாகம் நீதிமன்றில் எதிர்வரும் 21 ஆம் திகதி!
ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு:இன்று முதல் புதிய கட்டணம் அமுலில்!
தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுர!