யானை தாக்கிப் பெண் பலி: இருவர் காயம்!

மட்டக்களப்பு – முனைக்காட்டில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை முனைக்காடு கிராமத்திற்குள் இன்று (27) அதிகாலை புகுந்த காட்டு யானை, பொருட்களுக்கு சேதம் விளைவித்ததோடு, வீட்டிலிருந்தவர்களையும் தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில் 75 வயதுடைய வயோதிவப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு காயமடைந்த மேலுமிரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version