யாழ்.குருநகர் பகுதியிலிருந்து பாலைதீவுக்கு அந்தோணியார் திருவிழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 25 பேர் நீரில் மூழ்கினர்.
அதனையடுத்து கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் அவர்களில் 23 பேரை மீட்டு கரை சேர்த்தனர்.
மீட்க்கப்பட்டவர்கள் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் முன்னதாக உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்திசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதேவேளை, காணாமல் போன இருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகிறது.
பாலைதீவு அந்தோணியார் ஆலய திருவிழா நாளை(07) இடம்பெறவுள்ள நிலையில் திருவிழாவிற்கு பயணித்தவர்களின் படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.

எழுவைதீவில் வட்டார சபை ஸ்தாபிப்பு!
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் தீ விபத்து!
கடலுக்குச் செல்ல வேண்டாம்: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷல்!