இந்தியாவின் 77ஆவது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாணதிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று(26) காலையில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீசாய் முரளி, இந்திய தேசியக் கொடியேற்றி ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.


தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்துச் செய்தியை துணைத்தூதுவர் வாசித்தார்.


அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் பலவும் நிகழ்வை அலங்கரித்தன.


1950 ஆம் ஆண்டு ஐனவரி 26 ஆம் திகதி இந்திய அரசியலமைப்பு அமலில் வந்ததை நினைவுகூரும் வகையில் இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பிரித்தானிய இளநிலை வெளிவிகார அமைச்சராக உமா குமரன் நியமனம்!
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக இடை நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
வலப்பனையில் காட்டுத் தீ பரவல்:10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை!
சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!