நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் மேற்கொண்டு வரும்பணிப் புறக்கணிப்பு இரண்டாம் நாளாக இன்றும்(24) தொடர்கிறது.
நேற்று(23) காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகிய போராட்டம், தொடர்ந்தும் இன்றைய தினமும் நடைபெறுகிறது.
சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு இடம்பெற்றுவருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.
பணிப் புறக்கணிப்பு காரணமாக, யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுகள் இயங்கவில்லை. அதனால் தொலை தூரங்களிலிருந்து வருகைதரும் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நீதித்துறைக் கட்டமைப்புச் சிக்கல்கள் குறித்து அவசர விவாதம் கோரி சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம்!
வரணி மத்திய கல்லூரி மைதான அரங்கைத் திறந்து வைத்த இராணுவத் தளபதி!
செம்மணியில் இன்றும் 7 என்புக் கூடுகள் அடையாளம்!
துப்பாக்கி வெடித்ததில் மன்னாரில் இராணுவச் சிப்பாய் பலி!