யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மீசாலையில் நினைவேந்தல்!

யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வு யாழ்.தென்மராட்சி மீசாலை – புத்தூர் சந்திப் பகுதியில் இன்று(26) இடம்பெற்றது.

லெப்டினன் மன்றவாணனின் தாயார் முதல் சுடரை ஏற்றி வைத்தார்.அதனைத் தொடர்ந்து உயிர்நீத்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version