திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் முச்சக்கரவண்டி வயலுக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (29) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணும், சிறுவர்கள் இருவருமாக மூவரும் உறவினர் வீட்டிற்கு பயணித்த வேளையிலேயை இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட சிறுவர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
காணிகளை விடுவிக்கக்கோரி மயிலிட்டி பிரதேச மக்கள் ஆறாவது வெள்ளியும் போராட்டத்தில்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் முதலாவது தகுதிச் சுற்று இன்று ஆரம்பம்!