வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக அல்லது களஞ்சியப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களைப் பெற்றுக்கொண்ட இடம், முறையான ஆவணங்கள் அல்லது பற்றுச்சீட்டுகளை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, வர்த்தக நிலையங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அல்லது விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பாக உரிய கொள்முதல் ஆவணங்களை வைத்திருப்பது கட்டாயம் என அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த பொருட்கள் பெறப்பட்ட விநியோகஸ்தர்களின் பெயர் மற்றும் முகவரி, கொள்முதல் செய்யப்பட்ட திகதி மற்றும் விலை, பொருட்களின் வகை மற்றும் அளவு, அத்தோடு தொடர்புடைய தொகுதி இலக்கங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஆவணங்களில் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது குறித்த ஆவணங்கள் அதிகாரிகளால் பரிசோதிக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!