வலுசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் இந்த நியமனம் நேற்று(20) வழங்கப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சு பதவிக்கு மேலதிகமாக அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார்.
நிலக்கரி கெள்வனவில் முறைகேடு இடம்பெற்றதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு அதனை விசாரணை செய்துவருகிறது.
அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, கடந்த வெள்ளுக்கிழமை பதவி விலகியிருந்தார்.
அதனையடுத்து வலுசக்தி அமைச்சுக்கு புதிய அமைச்சராக அனுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய இளநிலை வெளிவிகார அமைச்சராக உமா குமரன் நியமனம்!
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக இடை நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
வலப்பனையில் காட்டுத் தீ பரவல்:10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை!
சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!