வலுசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் இந்த நியமனம் நேற்று(20) வழங்கப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சு பதவிக்கு மேலதிகமாக அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார்.
நிலக்கரி கெள்வனவில் முறைகேடு இடம்பெற்றதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு அதனை விசாரணை செய்துவருகிறது.
அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, கடந்த வெள்ளுக்கிழமை பதவி விலகியிருந்தார்.
அதனையடுத்து வலுசக்தி அமைச்சுக்கு புதிய அமைச்சராக அனுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!
கொழும்பில் உணவகத்தில் ஏற்பட்ட தீயால் மூவர் பலி: ஒருவர் வைத்தியசாலையில்!
காங்கேசன்துறை முதல் கற்பிட்டிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!
நீர்கொழும்பில்ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் இருவர் பலி!