சித்திரை வருடப்பிறப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று(15) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி, லிட்ரோ எரிவாயு விநியோகம் இன்று முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்தார்.
மே மாதம் வரை தேவையான எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயு விநியோகமும் இன்று முதல் வழமை போன்று நடைபெறும் என லாபஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பிரதான முனையங்கள் வழியாக இன்று முதல் ஐயாயிரம் மெற்றிக் தொன் எரிவாயு விநியோகிக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் குறிப்புட்டுள்ளது.

சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், பொலிஸார் அசமந்தபோக்கைக் கண்டித்த யாழ். நீதிமன்றம்!
வீதியில் நடந்து சென்ற இளைஞர்கள் மீது கார் மோதியதில் இருவர் பலி!
யாழ்.தென்மராட்சி வரணியில் சமூக சக்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!
வெசாக் தோரணைகளில் யாழ்.பொலிஸ் நிலையத் தோரணை முதலிடம்!