வவுனியா விபத்தில் ஓய்வு நிலை ஆசிரியர் பலி!

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஓய்வு நிலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு (09) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வயது 64 வயதுடைய ஓய்வுநிலை ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டி மீது பின்னால் வந்த லொறி மோதியுள்ளது.

அதனையடுத்து லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது துவிச்சக்கர வண்டியில் வந்தவரோ படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Exit mobile version