கிளிநொச்சி – தர்மபுரம் – விசுவமடு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்ந்து சென்ற ஹன்ரர் ரக வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று பின்னிரவு 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்தமையாலேயே துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூடு வாகனத்தின் சக்கரங்கள் மற்றும் பின் பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, தர்மபுரத்தில் கடந்த வாரம் டிப்பர் வாகனத்தில் சட்டவிரோத மணல் கொண்டு செல்லப்பட்ட போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் வாகனமே இந்த ஹன்ரர் வாகனமும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானிய இளநிலை வெளிவிகார அமைச்சராக உமா குமரன் நியமனம்!
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக இடை நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
வலப்பனையில் காட்டுத் தீ பரவல்:10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை!
சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!