கிளிநொச்சி – தர்மபுரம் – விசுவமடு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்ந்து சென்ற ஹன்ரர் ரக வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று பின்னிரவு 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்தமையாலேயே துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூடு வாகனத்தின் சக்கரங்கள் மற்றும் பின் பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, தர்மபுரத்தில் கடந்த வாரம் டிப்பர் வாகனத்தில் சட்டவிரோத மணல் கொண்டு செல்லப்பட்ட போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் வாகனமே இந்த ஹன்ரர் வாகனமும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
தமிழீழக் கோரிக்கையை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை – உதய கம்மன்பில தெரிவிப்பு!