இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் மீனவர்கள் பாரிய போராட்டம்..!

யாழ்ப்பாணத்திலுள்ள கடற்றொழில், நீரியல் வளத் திணைக்களம் முன்பாக
இன்று(12) காலை 9.00 மணியளவில் போராட்டம் ஆரம்பமானது.

போராட்டம் காரணமாக, பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து பேரணியாக ஆர்ப்பாட்டக்காரர்கள், யாழ்.மாவட்ட செயலகம் வரை சென்று யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

Exit mobile version