IRIS Dena கப்பல், நிராயுதபாணி என்ற செய்தியை மறுத்தது அமெரிக்கா!

இலங்கையை அண்டிய கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானின் IRIS Dena கப்பல், நிராயுதபாணியாக இருந்ததாக வெளியாகும் செய்தியை அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப்பீடம் மறுத்துள்ளது.

சர்வதேச சட்டங்களின்படி அந்தப் போர்க்கப்பல் இராணுவ இலக்கு எனவும், அந்தப் போர்க் கப்பலை அழிப்பதற்குப் பலத்தைப் பிரயோகிக்க அனுமதி உண்டு எனவும் கட்டளைப்பீடம் விளக்கமளித்துள்ளது.

அதற்கமைவாகவே ஈரானின் IRIS Dena கப்பல் அழிக்கப்பட்டதாகவும், ஆயுத மோதல் சட்டங்களுக்கு இணங்க, சம்பவத்தில் உயிர் தப்பியவர்களுக்கு இலங்கை அரசால் மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப்பீடம் சுட்டிக்காட்டியுள்ளது

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version