யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது.
போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக பரிசீலனை நடைபெறும் வரை இந்த இடைக்கால தடை உத்தரவு அமலில் இருக்கும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரனும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சார்பாக சட்டத்தரணி கௌசல்யாவும் ஆயிராகியிருந்தனர்.

வீதியில் நடந்து சென்ற இளைஞர்கள் மீது கார் மோதியதில் இருவர் பலி!
யாழ்.தென்மராட்சி வரணியில் சமூக சக்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!
வெசாக் தோரணைகளில் யாழ்.பொலிஸ் நிலையத் தோரணை முதலிடம்!
வெசாக் தோரணை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் அறுவர் பலி: 12 பேர் காயம்!