இராணுவ உணவகங்களில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்வதை முற்றாக தடைசெய்ய பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் இன்று(23) இடம்பெற்றது.

இதன்போது, பருத்தித்துறை பிரதேச சபையின் 9 ஆம் வட்டார உறுப்பினர் குறிஞ்சிக்குமரன், “பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் இராணுவ உணவகங்களில் பொது மக்களுக்கு வியாபாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்ட வேண்டும்” என்றும்,

இராணுவ உணவகங்களில் இராணுவ வீரர்களுக்கு மாத்திரமே வியாபார நடவடிக்கைகள் இடம் பெற வேண்டும்” என்றும் கோரும் பிரேரணையைக் கொண்டுவந்தார்.

அந்தப் பிரேரணை ஏகமனதாக சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Exit mobile version