தமிழ்நாடு – இராமநாதபுரம் – புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபா பெறுமதியான
7 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொலிஸார் இன்று(18) சோதனை செய்தனர்.
அதனையடுத்து சிலர் தப்பிச் சென்றுள்ள நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது விட்டுச்சென்ற சிகரெட்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றுயுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் புதுமடம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும்,
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வரும் இந்திய துணை ஜனாதிபதி!
யாழ்.போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளைப் பிரசவித்த தாய்!
எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜிம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்!
ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில்,பங்கேற்க சீனா செல்லும் யாழ்ப்பாண வீராங்கனைகள்!