இஸ்ரேலுக்கான தனது நாட்டுத் தூதுவரை நிரந்தரமாகத் திரும்பப் பெறுவதாக ஸ்பெயின் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
காசா விவகாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த இராஜதந்திர முரண்பாடுகளின் உச்சக்கட்டமாக இந்த தீர்மானத்தை இஸ்பெயின் எடுத்துள்ளது.
இனிவரும் காலங்களில், இஸ்ரேலுக்கான ஸ்பெயினின் தூதரகத்தை முழுநேரத் தூதுவருக்குப் பதிலாக, இடைக்கால அதிகாரியே வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேல் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளை ஸ்பெயின் கடுமையாக விமர்சித்து வருகிறது.
அண்மையில் பலஸ்தீனத்தைத் தனிநாடாக இஸ்பெயின் அங்கீகரித்தமையும் இந்த உறவு விரிசலுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

சிம்பாவேயுடனான தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து மகளிர் அணி!
லசித் மலிங்கவின் புதிய முயற்சிக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு!
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் – எச்சரிக்கும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பு!
சில உணவு வகைகளின் விலைகள் இன்று ள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும்!