எஹெலியகொட விபத்தில் 13 பேர் காயம்!

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் பயணித்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் எஹெலியகொட நகரில் நேற்றிரவு(15) 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

எஹெலியகொட நகரில் பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள், மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் இரண்டு கார்கள் என ஆறு வாகனங்களை மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 13 பேர் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version