கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் பயணித்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் எஹெலியகொட நகரில் நேற்றிரவு(15) 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
எஹெலியகொட நகரில் பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள், மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் இரண்டு கார்கள் என ஆறு வாகனங்களை மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 13 பேர் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வழமைக்குத் திரும்பிய எரிவாயு விநியோகம்!
தான் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்!
ஐம்பதிற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை!
புத்தாண்டு கால விசேட சேவையில் கிடைத்த ஒரு பில்லியன் வருமானம்!