காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து, இருவர் பலி!

காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் பேருந்து ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று நள்ளிரவு (01) இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரும், சிறுவன் ஒருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்த களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version