கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !

கிளிநொச்சி உருத்திரபுரம் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (03) நண்பகலில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயடைந்த இளைஞர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version