கீரிமலை கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி!

யாழ். காங்கேசன்துறை, கீரிமலை கடலுக்கு நீராடச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச்
நேற்று(19) பிற்பகலில் இடம் பெற்றுள்ளது.

கட்டுவன் தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த 41வயதுடைய குடும்பஸ்தரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வருகைதந்த உறவினர்களோடு கீரிமலை கேணியில் நீராடிய பின்னர் கடலில் நீராடியுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்திலேயே குறித்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கியுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version