கொழும்பு – தலவத்துகொட பகுதியிலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு,ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த தீ விபத்து இன்று (09) காலை இடம்பெற்றுள்ளது.
தீ விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நால்வரில் மூவரே உயிரிழந்துள்ளனர்.
மற்றையவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துபாய் வாகன விபத்தில் 7 இந்தியர்கள் பலி!
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!
காங்கேசன்துறை முதல் கற்பிட்டிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!
நீர்கொழும்பில்ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் இருவர் பலி!