நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைதாள்கள் திருத்தும் பணிகள் நாளை (12) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஏ.கே.சுபாஷினி இந்திக்ககுமாரி லியனகே தெரிவித்தார்.
இந்தப் பரீட்சை விடை தாள்கள் திருத்தம் பணிகள் இரு கட்டங்களாக இடம் பெறவுள்ளன.
முதலாம் கட்டம் நாளை 12 ஆம் திகதி முதல் 23 வரை இடம்பெறவுள்ளது.
இரண்டாம் கட்டம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இடம்பெற உள்ளது.
இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சை ஆணையாளர் ஏ.கே.சுபாஷினி இந்திக்ககுமாரி லியனகே குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கட்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் – எச்சரிக்கும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பு!
சில உணவு வகைகளின் விலைகள் இன்று(11) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது