சிரியத் தலைநகர் டமாஸ்கஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு நேற்று (02) இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற வளாகத்திற்கு மிக அருகிலுள்ள இந்த உணவகத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேசையின் அடியில் மறைத்து வைத்திருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் பாதுகாப்பு அமைச்சுக் கட்டடத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு டமாஸ்கஸில் இடம்பெற்றுள்ள இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவமாக இது அமைந்துள்ளது.

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!