சிரியத் தலைநகர் டமாஸ்கஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு நேற்று (02) இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற வளாகத்திற்கு மிக அருகிலுள்ள இந்த உணவகத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேசையின் அடியில் மறைத்து வைத்திருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் பாதுகாப்பு அமைச்சுக் கட்டடத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு டமாஸ்கஸில் இடம்பெற்றுள்ள இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவமாக இது அமைந்துள்ளது.

விபத்துகளால் நாளொன்றுக்கு 30 பேர் வரை பலியாவதாக அதிர்ச்சித் தகவல்!
மாயமான வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்பு!
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்தமாதம் வீழ்ச்சி!
FIFA கால்பந்தாட்ட சுற்றில் ஸ்பெயின் – ஆஸ்திரியா அணிகள் நாளை மோதல்!