இலங்கையில் பல்வேறு வகையான விபத்துக்கள் காரணமாக நாளொன்றுக்குச் சுமார் 30 பேர் வரை உயிரிழப்பதாகச் சுகாதார அதிகாரிகளால் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்களில் வீதி விபத்துக்கள் பிரதான பங்காகவுள்ள போதிலும், பொதுமக்கள் ஏனைய பொதுவான ஆபத்துக்கள் குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனச் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் சமித்த சிறிதுங்க வலியுறுத்தியுள்ளார்.
உயரமான இடங்களிலிருந்து தவறி வீழ்தல்,நீரில் மூழ்குதல்,மின்சாரத் தாக்குதலுக்குள்ளாதல்,பாம்புக்கடிக்குள்ளாதல் என்பன ஏனைய ஆபத்துக்களாக அமைந்துள்ளன.
இந்த நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகத் போக்குவரத்து மேலாண்மை மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
பணின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!
வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!