யாழ் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய சுகாதாரத் தொண்டர்கள், யாழ். போதன வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதாரத் தொண்டர்கள் இன்று (05) காலை 8:30 மணி முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சுகாதார உதவியாளர் நியமனத்தின் போது சுகாதாரத் தொண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சுகாதார அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்த போதிலும்,
தற்போது இடம் பெற்றுவரும் சுகாதார உதவியாளர் நேர்முக தேர்வில் தொண்டர்கள் அழைக்கப்படவில்லை எனத் தெரிவித்தே சுகாதாரத் தொண்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போரட்ட இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக கருணைநாதன் இளங்குமரன்,ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடினர்.

பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவு தினம் உரும்பிராயில்!
கட்டைக்காட்டுக் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது!
புரிந்துணர்வு ஒப்பந்த்த்திலுள்ள பல சரத்துக்கள் நீக்கப்பட வேண்டியுள்ளது : ஈரான் தெரிவிப்பு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் போட்டியில்: காயம் காரணமாக விராட் கோலி விலகல்!