சோமாலியாவின் வட கிழக்குக் கடற்கரைக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் கப்பலையும் அதிலிருந்த மாலுமிகளையும் சோமாலிய கடன்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.
18 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் எரிபொருளையும், கப்பலிலிருந்த 17 மாலுமிகளையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.
ஹானர் 25 என அடையாளம் காணப்பட்ட குறித்த கப்பல், கடந்த புதன்கிழமை இரவு கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் தரித்து நின்றபோது ஆயுதம் ஏந்திய ஆறு போர் கொண்ட கடற் கொள்ளையர்களால் கடத்தற்பட்டுள்ளனர்.
ஷாஃபூன் மற்றும் பந்தர் பெய்லா ஆகிய மீன்பிடி நகரங்களுக்கு இடையே, சோமாலியக் கடற்கரைக்கு அருகே அந்தக் கப்பல் தற்போது நங்கூரமிடப்பட்டுள்ளதாக புன்ட்லாந்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய இளநிலை வெளிவிகார அமைச்சராக உமா குமரன் நியமனம்!
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக இடை நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
வலப்பனையில் காட்டுத் தீ பரவல்:10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை!
சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!