டீசல் விலை குறைக்கப்பட்டாலும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை சூத்திரம் மாத இறுதியில் முன்னெடுப்பதால் அதன் அடிப்படையிலேயே பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
எனினும் ஜூலை மாதத்தில் பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டால் அதன் பின்னரோ அல்லது அதற்கு முன்னரோ டீசல் விலை குறைக்கப்படுமாயினும் 6 மாதங்கள் வரை எவ்வித கட்டண திருத்தத்தையும் மேற்கொள்ளப் போவதில்லை.
ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் இறுதி வரையான காலப்பகுதி வரையில் தனியார் பஸ் போக்குவரத்துத்துறை நாளொன்றுக்கு 25 ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் செய்துக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் டீசல் விலை குறையுமானால் பஸ் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என எவ்வித உள்ளடக்கமும் இல்லை.
இதுவரை புரிந்துணர்வின் அடிப்படையிலேயே அதனை நாம் செய்து வந்தோம். இனி அவ்வாறு செய்யப் போவதில்லை. அது குறித்து எம்மீது வழக்கு தொடுக்கவும் முடியும் எனவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!