பேருந்து கட்டணத் திருத்தம் செய்யப்படாததால் சில தனியார் பேருந்து சங்கங்கள் சேவையிலிருந்து விலகியுள்ளன.
இதனால் இன்று(24) காலை பிரதான பேருந்து நிலையங்களில் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
டீசல் விலை அதிகரித்ததால் பேருந்து கட்டணத்தை திருத்த வேண்டும் என சங்கங்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருந்தன.
நேற்று (22) கட்டண திருத்தம் வழங்குமாறு கோரியிருந்தாலும் அது நடைமுறைக்கு வரவில்லை.
இதனால் இன்று சேவையை புறக்கணிக்க தீர்மானித்ததாக தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!