தெற்காசிய எறிபந்து
(Throwball) போட்டிக்கு இலங்கை தேசிய அணியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் விளையாடுகின்றனர்.
இந்தியாவில் இன்று 16 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள தெற்காசிய எறிபந்துப்போட்டி,நாளை மறுதினம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, வவுனியா கனகராஜன்குளம் மகா வித்தியாலய மாணவரான நா.நாவேந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் ஏ.ஜெனிஸ்ரன் ஆகியோர் விளையாடுகின்றனர்.
எறிபந்து விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்தி தேசிய அணியில் விளையாடும் இவ்விரு வீரர்களும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

வித்யா படுகொலை வழக்கு தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது யாழ்.மேல் நீதிமன்றம்!
அமெரிக்க விமானப்படை விமானம் வானத்தில் விபத்திற்குள்ளானதில் 8 பேர் பலி!
உயர்வடைந்த கடலோரம்: நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள பேரழிவு!
புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!