தொடரும் மோசமான காலநிலை:மறு அறிவித்தல் வரை விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பரப்பு அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்ற வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழிலாளர்களும் மறு அறிவித்தல் வரை மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளுக்குள் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version