நவீன நரம்புத் தூண்டல் முறை கலந்துரையாடல் – யாழ்.மருத்துவ பீடத்தில்!

நவீன நரம்புத் தூண்டல் முறையான Transcranial Magnetic Stimulation (TMS) தொடர்பான கலந்துரையாடல், யாழ். பல்கலைக்கழக மருத்துவப்பீட CTRB மண்டபத்தில் இன்று (10) இடம்பெற்றது.

அமெரிக்காவைச் சேர்ந்த “நவீன நரம்புத் தூண்டல்” (TMS) வைத்திய நிபுணர் தாரிக் பெரேரா வளவாளராக கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது TMS முறையின் அடிப்படை கோட்பாடுகள், மருத்துவப் பயன்பாடுகள் மற்றும் மனநலத் துறையில் அதன் எதிர்கால பங்கு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் மனநல மருத்துவத் துறை ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version