யாழ்ப்பாணம் – மன்னார் ஏ 35 வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(15 )அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சியை சேர்ந்த இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
ஒருவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், மற்றவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மகாவலி கங்கை குறுக்காற்றில் நீராடிய மூவரைக் காணவில்லை: தேடுதல் தொடர்கிறது!
எமது பண்பாடே எம்மை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது – ஜனாதிபதி தெரிவிப்பு!
IPL, 17 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸும், 18 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸும் வெற்றி!
இன்று முதல் 18 வரை QR நடை முறையில் இல்லை!