Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைவடக்கு மாகாணம்

நாவற்குழியில் டிப்பர் விபத்து இளைஞர் இருவர் பலி!

யாழ்ப்பாணம் – மன்னார் ஏ 35 வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(15 )அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சியை சேர்ந்த இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.

ஒருவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், மற்றவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button