யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி 8 ஆவது வாரமாக இன்றும் (09) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பலாலி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை விடுவித்து மீள்குடியேற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும் என காணிகளை இழந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
“எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும், பூர்வீக நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும், மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும்” உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமது காணிகளை விடுவிப்பதற்கான உறுதியான நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
பலாலியில் இராணுவத்துன் வசமுள்ள காணிகளை விடுவிக்ககோரி காணிகளை இழந்த மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரியம்மன் இன்று தேர்!