பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இன்று(06) முதல் ஆரம்பமாகியுள்ளன.

இந்தப் பதிவுகள் நடவடிக்கைகள் இம் மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தெரிவுசெய்யப்பட்ட பாடநெறி அல்லது பல்கலைக்கழகம் தொடர்பாக மேன்முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள், தங்களது விண்ணப்பங்களை இம் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version