பிரான்ஸின் “பொன்டால்ட்-கொம்பால்ட்” நகர துணை மேயராக ஈழத்தமிழரான ஆதித்யா ஆனந்தராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
“பொன்டால்ட்-கொம்பால்ட்” நகர தேர்தல் அண்மையில் இடம்பெற்று நேற்று முன்தினம்(23) முதலாவது அமர்வு இடம்பெற்றது.
இதன்போது ஈழத்தமிழரான ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆதித்யா ஆனந்தராசா, யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்றுறை பகுதியைச் பூர்வீகமாக கொண்டவர்.
சிறுவயதிலிருந்தே சமூக சேவை மற்றும் அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், தன்னுடைய கல்வி மற்றும் சமூகப் பின்னணியைக் கொண்டு வெளிநாட்டில் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
தன்னுடைய19 வயதிலேயே நகராட்சிமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
தற்போது தனது 25 வயதில் துணை மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற பாகிஸ்தான் கப்பலைத் தடுத்து நிறுத்திய ஈரான்!
போதை மாத்திரைகள் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது !
தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி!
நாதன் எல்லிஸ்ஸிற்காக ஸ்பென்சர் ஜான்சன் களத்தில் சூப்பர் கிங்ஸ் அதிரடி முடிவு!