புத்தாண்டு காலத்தில் விசேட போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுத்ததன் மூலம், கடந்த 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன இதனைத் தெரிவித்தார்.
புத்தாண்டுக்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட விசேட பேருந்து சேவைகள் மூலம் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபை வரலாற்றிலேயே ஒரே நாளில் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானம் பதிவாகியுள்ளது.
அன்றைய தினம் மாத்திரம் 213 மில்லியன் ரூபா வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன குறிப்பிட்டார்.

ஐம்பதிற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை!
புத்தாண்டு காலத்தில் 36 விபத்துக்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதிவு!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 23 ஆவது போட்டி இன்றிரவு!
மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமையை வலியுறுத்தி துண்டுப் பிரசுர விநியோகம்!