பொடி லெசி இலங்கைக்கு அழைத்து வருகை!

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி, காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க, இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

மும்பையில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவையின் யுல்.எல் 142 விமான ம் ஊடாக பொடி லெசி, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

முன்னர், நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version