மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமையை வலியுறுத்தி துண்டுப் பிரசுர விநியோகம்!

மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமையை வலியுறுத்தி துண்டுப் பிரசுர விழிப்புணர்வு விநியோகம் மஸ்கெலியா சாமிமலை நகரில் இன்று(15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“மக்களுடைய காணி உரிமை என்பது பிரஜைகளுக்குரிய மனித உரிமை” என்னும் தொனிப்பொருளில் பதினோரு விடயங்களை உள்ளடக்கியதாக இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

சாமிமலை,நோர்வூட் மற்றும் பொகவந்ததலாவை உள்ளடக்கிய நகரங்களிலும் தோட்டப் புறங்களில் இந்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version