இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் மாவை சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில்(31) இடம்பெற்று வருகிறது.


இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்திய துணை தூதுவர் சாய்முரளி, தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் பாஞ். இராமலிங்கம், தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த நிகழ்வின்போது மாவை சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவு மலரும், பேராசிரியர் பாஞ். இராமலிங்கம் எழுதிய ஈழ அண்ணன் மாவை சோ.சேனாதிராசா நூலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.



IPL 6 ஆவது போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி வெற்றி!
அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணை விலை!