யாழ்.தென்மராட்சி மீசாலை கிழக்கு பிரதேசத்தில் ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு இன்று(28) உரிமையாளர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.


கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில், இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, 30 வீட்டுத் திட்டங்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.


அந்த வருகையின்போது மீசாலை கிழக்கில் 20 இலட்சம் ரூபாபெறுமதியான குறித்த வீட்டிற்கான அடிக் கல்லையும் நாட்டி வைத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் புதிய வீட்டை பயனாளிகளிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தனர்.


இந்த நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



ஊழல் இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் மற்றும், உயிரத்த ஞாயிறு தாக்குதல் குற்ற சாட்டுகளில் தப்பிப்பதற்காகவே எதிர் கட்சிகளின் கூட்டணி அமைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகர் குற்றம் சாட்டினார்.
யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!
சோமாலிய கடற்கொள்ளையர்களால் 17 மாலுகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல்!
அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!