முன்னாள் அமைச்சர் ஹரிசன், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (27) காலையில் முன்னிலையாகியுள்ளார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால், வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாகவே அவர் முன்னிலையாகியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு முதல் 2024 வரையான காலப்பகுதிகளில் ஜனாதிபதி நிதியிலிருந்து பெற்றதாக கூறப்படும் நிதி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் 23 பேர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதே இந்த விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்த பட்டியலில் முன்னாள் அமைச்சர் பி. ஹரிசனின் பெயரும் உள்ளடங்கியுள்ள நிலையில், வாக்குமூலமளிக்க அவர் இன்று முன்னிலையாகியுள்ளார்.

Exit mobile version