யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலைய அயல் பாணியிலிருந்து கஞ்சா மீட்பு!

யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலைய பின் பகுதியிலுள்ள வெற்றுக் காணிக்குள் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் பின்புறமாகவுள்ள வெற்றுக்காணிக்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொதி ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து பொலிஸார் பொதியை மீட்டு சோதனை செய்தனர்.

அதன்போது அதற்குள் 10 கிலோ கேரளா கஞ்சா காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து மேலதிக வ்சாரணைகளை கொடிகாமம் பொலிஸா் முன்னெடுத்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version