யாழ்.தென்மராட்சி வரணியில் சமூக சக்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

“சமூக சக்தி” நாடு முழுவதும் “ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் வேலை திட்டம்” நிகழ்வு யாழ் தென்மராட்சி வரணி சுட்டிவேரத்தில் இன்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதற்கமைய பருத்தித்துறை – கொடிகாமம் வீதி சுட்டிவேரத்திலுள்ள பூசைக்குளத்தை புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி,

தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ், அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version